பண்டாரகம அட்டுலுகம அல்கஸ்ஸாலி தேசிய பாடசாலையில் தேசபந்து மர்ஹூம் முஹம்மத் நஜீப் ஹாஜியார் ஞாபகார்த்த மாடிக் கட்டடமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.
அட்டுலுகம பிரதேசத்தின் முக்கியஸ்தராக விளங்கிய பிரபல சமூக ஆர்வலரும் சமூக சேவையாளருமான அன்னாரின் குடும்பத்தினரால் மேற்படி ஞாபகார்த்த கட்டடம் இப்பாடசாலையில் நிர்மாணித்து அன்பளிப்புச் செய்யப்படவுள்ளது.
இத்திட்டம் தொடர்பான அத்திவாரக் கல் நடும் வைபவம் அல்கஸ்ஸாலி தேசிய பாடசாலை வளவில் அண்மையில் இடம்பெற்றது. சமய கலாசார விவகார அமைச்சர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நிமல் சந்திரரத்ன, ஜாமிஆ நளீமிய்யா கலாபீட முதல்வர் அஷ்ஷெய்க் ஏ.ஸீ. அகார் முஹம்மட், அட்டுலுகம ஜம்இய்யதுல் உலமா முக்கியஸ்தர், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட ஊர் முக்கியஸ்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.
(பாணந்துறை மத்திய குறூப் நிருபர்)