மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னார் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
மாந்தை மேற்கு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பெரியமடு மற்றும் ஈச்சளவக்கை ஆகிய கிராம மக்களுக்கு உதவிகள் தேவை என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைவாக மன்னார் நலன்புரி சங்கம் முன்வந்து உதவிகளை செய்துள்ளது.
அதற்கமைவாக மன்னார் நலன்புரி சங்கம் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் அரவிந்தன் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு விபரங்களை சேகரித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை முன்னெடுத்தனர்.
இதன்போது இப்பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மன்னார் குறூப் நிருபர்