கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எம். நயீம், மொழிபெயர்த்த ‘ஸூரத்துல் கஹ்பின் ஒளியில்’ தமிழ் மொழி மூலமான அல்குர்ஆன் விளக்கவுரை நூல் வெளியீட்டு
விழா கடந்த வியாழக்கிழமை (07) கொழும்பு, தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூலின் முதற்பிரதியை நூலாசிரியரின் தாயார் சித்தி பழீலா மொஹிடீனுக்கு நூலாசிரியர் வழங்கி வெளியிட்டு வைத்தமை விசேட அம்சமாகும். நிகழ்வில் ஊக்குவிப்பு முதலீட்டு அமைச்சின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம். நயிமுதீன் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.
தலைமையுரையை கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என். கபூர்டீனும் நூல் நயவுரையை கலாநிதி ரவூப் ஸெயினும் ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தினர்.
மேற்படி நிகழ்வில் உலமாக்கள், புத்திஜீவிகள் உட்பட பராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ருப், எம். தௌபீக், நளீமிய்யா பழைய மாணவர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.
(தெஹிவளை, கல்கிசை விசேட நிருபர்)