காலையில் ஏற்பட்ட தனிப்பட்ட குரோதம் பின் மாலையில் கைகலப்பாக குழுச் சண்டையாக மாறி வாள்வெட்டுகளுக்கு உள்ளாகிய மூவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் நேற்று (09) இரவு 8.30 மணியளவில் முருங்கன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது;
மன்னார் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அச்சங்குளம் கிராமத்தில் இருவருக்கு ஏற்பட்ட தனிப்பட்ட குரோதம் பின் மாலையில் அது கைகலப்பு குழுச் சண்டையாக மாறியதாக ஆரம்ப விசாரனையில் தெரிய வந்துள்ளது.
இந்த சண்டையில் வாள்கள் கையாளப்பட்டதால் மூவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மன்னார் முருங்கன் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக முருங்கன் பொலிஸார் தீவிர விசாரனைகளை முன்னெடுத்துள்ளதுடன் வாளால் வெட்டியவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தலைமன்னார் விஷேட நிருபர் – வாஸ் கூஞ்ஞ