225
சர்வதேச மனக்கணித போட்டியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவரொருவர் இரண்டாமிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.
UCMAS இன் திருநெல்வேலி கிளை மற்றும் யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த சுதர்சன் அருணன் என்ற மாணவனே ஆறு வயதுக்குட்பட்ட ஏ1 பிரிவு போட்டியில் பங்குபற்றி இரண்டாமிடத்தை பெற்றுள்ளார். மலேசியாவில் நேற்றுமுன்தினம் (03) நடைபெற்ற போட்டியில் 80இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர்.
தேசிய மற்றும் சர்வதேசப் போட்டிகளில் யாழ். திருநெல்வேலி UCMAS கிளை வெற்றிப் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.