Monday, April 29, 2024
Home » தனியார் உறுப்பினர் சட்டமூலங்களை பரிசீலனை செய்ய மேலதிக உறுப்பினர்கள் நியமனம்

தனியார் உறுப்பினர் சட்டமூலங்களை பரிசீலனை செய்ய மேலதிக உறுப்பினர்கள் நியமனம்

- சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவிப்பு

by Rizwan Segu Mohideen
December 5, 2023 11:36 am 0 comment

“சஹன சமுதாய அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு மேலதிக உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (05) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இதற்கமைய, பிரமித்த பண்டார தென்னகோன், அ. அரவிந்த் குமார், (திருமதி) கீதா சமன்மலீ குமாரசிங்க, அசோக அபேசிங்ஹ, கிங்ஸ் நெல்சன், ரோஹண பண்டார, நிபுண ரணவக, ஜகத் சமரவிக்ரம ஆகியோர் மேலதிக உறுப்பினர்களான நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கிழக்கு மீளெழுச்சி அமைப்பு (கூட்டிணைத்தல்)” எனும் சட்டமூலத்தின் பரிசீலனைக்கென 113 (2) ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் பிரகாரம் சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்றும் பொருட்டு, அஸோக அபேசிங்ஹ, சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஸ்ஸாரப், சஞ்ஜீவ எதிரிமான்ன, கருணாதாஸ கொடிதுவக்கு, கிங்ஸ் நெல்சன், ரோஹண பண்டார, நிபுண ரணவக, டீ. வீரசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் சபாநாயகர் அறிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT