172
இந்திய நாட்டின் ஆந்திர மாநில ஸ்ரீராம ஜெயபக்த குழுவினர்கள் நேற்று(04) காலை 09 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்திற்கு வருகை தந்தனர். நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாட்டிலும் ஈடுபட்டனர்.
இந்திய ஆந்திர மாநில ஸ்ரீராம ஜெயபக்த சபையின் தலைவர் சிறி இராம ஜெயகீர்த்தி நாராயணசுவாமி தலைமையிலான 40 இற்கு மேற்பட்ட குழுவினர் இவ்வழிபாட்டில் கலந்துகொண்டனர். இவர்கள் யாழ். வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள், ஆலயங்கள் என்பவற்றை பார்வையிட்டனர்.
(கோப்பாய் குறூப் நிருபர்)