மாத்தளை- தம்புள்ளை பிரதான வீதியில் நோத் மாத்தளை சந்தியில் அமைந்துள்ள மதுபானசாலையை அகற்றுமாறு வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பௌத்த வழிபாட்டுத் தலம், இந்து ஆலயம் மற்றும் பாடசாலையொன்றுக்கு மத்தியில் மதுபானசாலை அமைத்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே அவ்விடத்திலிருந்து அகற்றக்கோரி பிரதேசவாசிகள் யடவத்த பிரதேச செயலக காரியாலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.
இதன் போது மகஜர் ஒன்றும் பிரதேச செயலாளர் மற்றும் மதுவரி திணைக்கள காரியாலய உயர் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் 200ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
‘மாணவர்களின் கல்வியையும் ஒழுக்கத்தையும் சீரழிக்காதே’, ‘மதுபானசாலையை உடன் அங்கிருந்து அகற்று’ போன்ற கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
(மாத்தளை சுழற்சி நிருபர்)
மதுபானசாலையை அகற்றுமாறு கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
145