323
கடும் மழை காரணமாக காவத்தை நகர பிரதான வீதியில் மின் கம்பத்துடன் மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
மண்மேடு மற்றும் மின்சார கம்பம் சரிந்து காவத்தை பிரதான வீதியில் வீழ்ந்தமையால் காவத்தை வீதி ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தன. எம்பிலிபிட்டிய, இரத்தினபுரி, எந்தானை, பெல்மதுளை, நிவித்திகலை உட்பட பல இடங்களுக்குச் செல்பவர்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்தனர். இதனால் போக்குவரத்துச் சேவைகள் பல மணிநேரம் முற்றாக பாதிக்கப்பட்டிருந்தன.
காவத்தை தினகரன் விசேட நிருபர்