204
சிறுபோகத்தில் சேதமடைந்த பயிர்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
முதற்கட்ட இழப்பீடுகளின் கீழ் 389 மில்லியன் ரூபாவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க விவசாய மற்றும் கிராமிய காப்புறுதி சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
இதற்கமைய, அங்குணுகொலபெலஸ்ஸவில் நேற்று முதற்கட்டமாக 250 விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்பட்டது. கடந்த முறை சிறுபோகத்தில் 65 ஆயிரம் ஏக்கர் வரட்சியினால் சேதமடைந்தன. 11 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை அறுவடைக்கு தயாராகவிருந்தபோது, பெய்த மழையினால் இவை அழிவடைந்திருந்தன.