111
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் 2023ஆம் ஆண்டுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.நிரஞ்சன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் ஆறு பயிற்சி நிலையங்களில் 24 பயிற்சிநெறிகளை பூர்த்தி செய்த 500 பேருக்கு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபைத் தலைவர் பிரசன்ன ரணசிங்க கலந்துகொண்டார்.