அட்டாளைச்சேனை அக்/அந்நூர் மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். பழைய மாணவர் சங்கத்தின் செயலாளரும், ஊடகவியலாளருமான றிசாத் ஏ. காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஆதார வைத்தியசாலை (அக்கரைப்பற்று) வைத்திய அத்தியட்சகர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர். றஜாப், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளரும், பாடசலை கல்வி மேம்பாட்டு இணைப்பாளருமான ஏ.எம். நெளபர்டீன் ஆகியோருடன் பிரதம பரிசோதகர் எம்.எஸ்.அப்துல் மஜீத் (ஓய்வு) ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்திருந்தனர்.
விசேட அதிதிகளாக ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உறுப்பினரும், எம்.ஜே.எஸ். குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான எம்.ஐ.எம்.ஜரீன், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஐ.எல்.அப்துல் ஹை, அந்நூர் மகாவித்தியாலய பிரதி அதிபர் எம்.எச்.எம்.றமீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர். ஆதார வைத்தியசாலை (அக்கரைப்பற்று) இரத்த வங்கிப் பிரிவின் வேண்டுகோளுக்கு அமைவாக இந்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த இரத்ததான முகாம் நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை_ -08 சனசமூக நிலையம் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எம் .எப்.எம்.நவாஸ் (திராய்க்கேணி தினகரன் நிருபர்)