குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் மலேரியாவைக் கட்டுப்படுத்தும் இரண்டாவது தடுப்பு மருந்தைப் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.
மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் இன்னும் மலிவான, திறன்வாய்ந்த தடுப்பு மருந்து உலக நாடுகளுக்குக் கிடைத்திருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
புதிய R21 Matrix-M தடுப்பு மருந்தை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியது. அதனை இந்தியாவின் சீரம் கழகம் தயாரித்துள்ளது.
குழந்தைகளுக்கான மற்ற மருந்துகளைப் போன்றே புதிய தடுப்பு மருந்தின் விலை இரண்டிலிருந்து நான்கு டொலர் வரை இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.
புர்க்கினா பாசோ, கானா, நைஜீரியா ஆகிய நாடுகளில் புதிய தடுப்பு மருந்துக்கு ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.