பாப்பரசர் பிரான்சிஸுக்கு ரோமில் உள்ள கெமலி மருத்துவமனையில் வயிற்றுப் பகுதியில் நேற்று சத்திர சிகிச்சை இடம்பெற்றுள்ளது.
குடலிறக்க சத்திரசிகிச்சை செய்து கொண்டிருக்கும் பாப்பரசர் அடுத்த சில நாட்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் தங்கி இருப்பார் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது.
86 வயதான பாப்பரசர் அண்மைய ஆண்டுகளில் தீவிர உடல் ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறார்.
அவர் தொடர்ச்சியான முழங்கால் பாதிப்பு காரணமாக ஊன்றுகோல் மற்றும் சக்கர நாற்காலியை பயன்படுத்தி வருகிறார்.
பாப்பரசருக்கு சத்திர சிகிச்சை அவசியம் என்று பாப்பரசரின் மருத்துவக் குழு அண்மைய நாட்களில் தீர்மானித்ததாக வத்திக்கான் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாப்பரசர் கடந்த மார்ச் மாதத்தில் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு மூன்று நாட்கள் மருத்துவமனையில் செலவிட்டார்.
தனக்கு முன்னர் பாப்பரசராக இருந்த பதினாறாவது பெனடிக், பாப்பரசர் பதவிக்கு விடைகொடுத்த நிலையில் அது போன்ற முடிவை எடுப்பதை அவர் நிராகரித்திருந்தார்.
Add new comment