ஐ.ம.ச. ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை, கண்ணீர்ப்புகை பிரயோகம்

- கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வாகன நெரிசல்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி மீது, கொழும்பு, மருதானை, டெக்னிக்கல் சந்திக்கு அருகில் பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, காலி முகத்திடல் மற்றும் அது சாந்த வீதிகளுக்குள் இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையான காலப்பகுதிக்குள் பிரவேசிப்பதற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு புறக்கோட்டை, ஓல்கொட் மாவத்தை உள்ளிட்ட வீதிகள் போக்குவரத்துக்கு முற்றாக தடைப்பட்டுள்ளதாகவும், மாற்று வழிகளை பயன்படுத்துமாறும் பொலிஸ் போக்குவரத்து பிரிவு வாகன சாரதிகளுக்கு அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...