உள்ளூராட்சி சபை தேர்தல் நாளை முக்கிய பேச்சுவார்த்தை

தேர்தல் அதிகாரிகள் கொழும்பிற்கு அழைப்பு

 

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலுள்ள பிரதி மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள், மாவட்டச் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது. மேற்படி பேச்சுவார்த்தை நாளை 23 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்காக அனைத்து மாவட்டங்களிலுமுள்ள மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவி, பிரதி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்ட தேர்தலுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...