டயானா கமகே தொடர்பில் CID பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை

குற்றப் புலனாய்வு திணைக்கள பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கடவுச்சீட்டு, பிறப்பு அத்தாட்சிப்பத்திரம், தேசிய அடையாள அட்டை தொடர்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடொன்று தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (27) குறித்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி அவரை நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

சட்டத்தரணிகள் குழுவொன்றினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ஐ.ம.ச. கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக டயனா கமகே, ஆளும் கட்சிக்கு ஆதரவளித்ததன் மூலம் தற்போது சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...