ஒமிக்ரோனை பழைய தடுப்பூசியால் கட்டுப்படுத்த முடியாது

WHO எச்சரிக்கை விடுப்பு

புதிய ஒமிக்ரோன் வைரஸ் திரிபுகளை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகளை மீண்டும் செலுத்துவது சிறந்த தீர்வாக அமையாது என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் புதிய Omicron திரிபுகளின் பரவலிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்கும் புதிய தடுப்பூசிகளுக்கும் உலக சுகாதார அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

கொரோனா தடுப்பூசிகளின் செயல் திறனை மதிப்பிடுவதற்காக உலக சுகாதார அமைப்பால்  உருவாக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இதனை வலியுறுத்தியுள்ளது. தற்போது கொரோனா வைரஸின் புதிய திரிபுகள் அதிகரித்து வருவதனால் செயலூக்கி தடுப்பூசியை மீண்டும் மீண்டும் செலுத்துவது சிறந்த வழியாக அமையாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது 149 நாடுகளில் Omicron வைரஸ் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கடுமையான நோய் தாக்கங்கள் ஏற்படுவதைத் தடுப்பது மாத்திரமின்றி தொற்று உறுதியாவதை தடுப்பதற்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...