பள்ளிவாசல்களில் கூட்டு அமல்களுக்கு அனுமதி இல்லை

பள்ளிவாசல்களில் கூட்டு அமல்களுக்கு அனுமதி இல்லை-Joint Amal Not Allowed In Mosques-Wakfs Board of Sri Lanka

- ஒரே தடவையில் 25 பேர் தனியாக மார்க்க கடமைகளை நிறைவேற்ற அனுமதி

பள்ளிவாசல்களில் ஐவேளை கூட்டுத் தொழுகை, ஜும்ஆ, ஜனாஸா உள்ளிட்ட கூட்டுத் தொழுகைகள் மற்றும் திருமண பதிவு, அல்குர்ஆன் ஓதுதல் உள்ளிட்ட கூட்டு செயற்பாடுகள் மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வக்ப் சபையின் பணிப்புரைக்கமைய, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

அதற்கமைய, சுகாதார வழிமுறைகளை பேணி உச்சபட்சம் ஒரே தடவையில் 25 பேர் பள்ளிவாசல்களில் தங்களது மார்க்க கடமைகளில் ஈடுபட அனுமதி வழங்கப்படுவதாக, இலங்கை வக்ப் சபை அறிவித்துள்ளது.


Add new comment

Or log in with...