அசாத் சாலி மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில்

அசாத் சாலி மாரடைப்பு காரணமாக வைத்தியசாலையில்

கைது செய்யப்பட்டு CID யின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், கடந்த மார்ச் 16ஆம் திகதி, அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.

கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...