சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த வாகனத்தை மறித்த பொலிஸ் அதிகாரி மீது வாகனத்தால் மோதி விட்டு கடத்தல்காரர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் பொலிஸ் அதிகாரி காலில் பலத்த காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முற்பகல் 10மணியளவில் வடமராட்சி வல்லிபுரம் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றும் அஜித் குமார என்பவரே இவ்வாறு படுகாயமடைந்தவராவார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு பொலிசார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்த நிலையில் வடமராட்சி வல்லிபுரம் வீதியூடாக சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த பட்டா ரக வாகனத்தை பொலிஸ் அதிகாரி நிறுத்துமாறு சைகை காட்டினார்.
சைகையை பொருட்படுத்தாத மண் கடத்தல்காரர்கள் பொலிஸ் அதிகாரி மீது வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகர்கோவில் விஷேட நிருபர்
Add new comment