பொறுப்புக் கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிடுகின்றார்கள்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பொறுப்புக்கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிடுகின்றார்கள் என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின்  அறிக்கை மீது 10ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. எதிர்க் கட்சியால் இது தொடர்பில் 3நாட்கள் விவாதம் கோரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதற்கு தயாராகவுள்ளது. எவ்வாறிருப்பினும் பொறுப்பு கூற வேண்டியவர்களே தற்போது கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு கூச்சலிட்டுக் கொண்டிருப்பவர்கள் தாம் அறிந்தவற்றை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கூறியிருக்கலாம். அவ்வாறின்றி தேவையற்ற கருத்துக்களை கூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது. எவ்வாறிருப்பினும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் நடவடிக்கையை தொடர்ந்து முறையாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

2015 ஆம் ஆண்டு முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறும் வரை இடம்பெற்ற பல சம்பவங்கள் தொடர்பில் அழுத்தங்களின் காரணமாக பொலிசாரினால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. மாவனெல்ல சம்பவம் இடம்பெற்ற போதே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றிருக்காது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...