சிகிச்சை பலனின்றி வயோதிப தாய் மரணம்

தனக்குத்தானே தீ மூட்டி, எரிந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட   வயோதிப மாது ஒருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

நக்கீரன் வீதி, அல்வாய் வடக்கைச் சேர்ந்த திருமதி தேவரத்தினம் சிவராசா (வயது- 71) என்ற தாயே, தீ மூட்டிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மண்ணெண்ணெய் ஊற்றியதால் எரிகாயங்களுக்குள்ளான இவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.எனினும் சிகிச்சை பலனளிக்காது நேற்று முன்தினம் (27) சனிக்கிழமை இவர் உயிரிழந்தார்.

பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலைக்கு சென்ற மரண விசாரணை அதிகாரி, சிவராஜா  விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை பொலிசார் நெறிப்படுத்தினர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகர்கோவில் விஷேட நிருபர்

 

 


Add new comment

Or log in with...