விபத்துக்குள்ளாகி தீப்பற்றிய கார் குருநாகலில் மின் கம்பத்துடன் மோதல்

குருணாகல் - ரம்புக்கன பிரதான வீதியில் கட்டுபிட்டிய பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு காரொன்று மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

வேகமாக வந்த கார் வீதியைவிட்டு விலகி அங்கிருந்த அதி சக்தி வாய்ந்த மின் கம்பமொன்றில் மோதி திடீரென தீப்பிடித்துள்ளதாக சம்பவத்தை கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தால் கார் முற்றிலுமாக எரிந்துள்ளதுடன், மின் கம்பமும் கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்த விபத்து நிகழ்ந்த நேரத்தில் மூன்று பேர் காருக்குள்ளிருந்ததாகவும் அவர்கள் மது போதையில் வாகனத்தை செலுத்தியுள்ளதாகவும் விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.

அவர்களில் இருவரை பொத்துஹெர பொலிஸார் கைது செய்துள்ளனர். மற்றைய சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பியோடி விட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Add new comment

Or log in with...