முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்று (25) உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டார்.
அவருக்கு உறுப்புரிமையை வழங்க ஏற்கனவே செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்த வாரம் இடம்பெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் அவர் கலந்துகொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உருமய கட்சியில் பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்தும் கடந்த 2020 டிசம்பரில் சம்பிக்க ரணவக விலகியிருந்தார்.
இந்நிலையிலே அவர் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add new comment