LPL இறுதிப்போட்டி ஜப்னா− கோல் அணிகள் இன்று பலப்பரீட்சையில்

இலங்கை ரசிகர்களது ஆவலுக்கு மத்தியில் விறுவிறுப்பான போட்டி

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு ஹம்பாந்தோட்டை, சூரியவெவ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி, - காலி கிளாடியேட்டர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபையும் ஐ.பி.ஜி நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது.

அதிலும் குறிப்பாக, இலங்கையைச் சேர்ந்த இளம் வீரர்கள் பலர் சிறப்பாக கலக்கியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் சம்பியன் பட்டத்தை வெல்லப்போவது திசர பெரேராவின் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியா? அல்லது பானுக ராஜபக்ஷவின் காலி க்ளேடியேட்டர்ஸ் அணியா? எது வெல்லும் என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

 


Add new comment

Or log in with...