வெலிகந்தவில் தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கைது

28 வயது போதை பொருளுக்கு அடிமையானவர்

வெலிகந்த கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த 28 வயது இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தப்பிச் சென்றிருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார்.

இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே இவ்வாறு தப்பிச் சென்றிருந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார் .

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர்களுள், போதைப் பொருள் பாவனை மற்றும் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் தொடர்ந்தும் தப்பிச் செல்ல முயற்சித்து வருவதால், அத்தகைய நபர்களை சிகிச்சைக்காக அனுமதிக்கும் போது போதைப் பொருள் பாவனை குறித்து விசாரணை செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார்.


Add new comment

Or log in with...