Saturday, October 24, 2020 - 6:00am
தொலைபேசியூடாக தெரிவித்தார்
81 ஆவது பிறந்த தினத்தை நேற்று கொண்டாடிய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சி.வி.விக்கினேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அவருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இதன்போது இருவரும் பொதுவான விடயங்களையிட்டுப் பேசிக்கொண்டபோதிலும், அரசியல் விவகாரங்கள் பேசப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. “பொதுமக்கள் தொடர்பாடலில் இலங்கையில் நீங்கள்தான் முதலாவது இடத்தில் இருக்கின்றீர்கள்” என விக்கினேஸ்வரன் இதன்போது பிரதமரிடம் தெரிவித்துள்ளார்.
Add new comment