மது போதையில் இடைஞ்சல்; இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் கைது

மத்தேகொடை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர், மது போதையில் முறையற்று நடந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு குறித்த இருவரும் பொலிஸ் விடுதியில் நேற்றிரவு முறையற்று நடந்து கொண்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த இரு பொலிஸ் கான்டபிள்கள் மீது செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தேகொடவிலுள்ள ஹோட்டலொன்றில் அவர்கள் இருவரும் மதுபானம் அருந்திவிட்டு, போதையில்
முறைகேடாக நடந்துகொண்டு இடைஞ்சல் விளைவித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் பணி இடைநீக்கம் செய்வதற்கான விசாரணைகள், கல்கிஸ்ஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் கல்கிஸ்ஸை உதவி பொலிஸ் அத்தியட்சகரினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...