நீராடச் சென்ற இரு மாணவர்களை காணவில்லை

கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரங்வல ஊடாக பாயும் களனி கங்கையில் நீராடச் சென்ற மாணவர்கள் இருவர், நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

நேற்று (01) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை ஒன்றின் மாணவர்கள் சிலர் நீராடச் சென்றிருந்தபோது, அவர்களில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முதுன்கொட மற்றும் நாதுன்கமுவ பிரதேசங்களைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர்கள் இருவரே இவ்வனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

காணாமல் போன குறித்த இரு மாணவர்களையும், பிரதேசவாசிகளின் உதவியுடன் பொலிஸாரும்  கடற்படையினரும் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் கிரிந்திவெல பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Add new comment

Or log in with...