வெலிசறை கடற்படை முகாமும் வைத்தியசாலையும் மீளத் திறப்பு

கொவிட்-19 தொற்றுக் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வெலிசறை கடற்படை முகாம் மற்றும் வைத்தியசாலை சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய தற்போது முழுமையாக திறக்கப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப் பேச்சாளர் இந்திக சில்வா தெரிவித்தார்.

கடற்படை வைத்தியசாலையில் தற்போது வழமையான சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முகாமின் வேலைகள் வழமை போன்று இடம்பெற்று வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட கடற்படை உறுப்பினர்கள் 899 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர் என்பதோடு, மேலும் 07 பேரே சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...