Thursday, July 16, 2020 - 1:58pm
கொவிட்-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், இ.போ.ச., தனியார் பஸ் வண்டிகளிலும் புகையிரதங்களிலும் யாசகம் செய்வதை நிறுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவினால், உரிய நிறுவனங்களின் தலைவர்களுக்கும் புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கும் இவ்வாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நேற்று (15) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது, குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலின்போது, கொவிட்-19 ஐ தடுக்கும் வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
Add new comment