காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிங் கங்கையில் நீராடச் சென்ற 13 வயதுச் சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான்.
நேற்று (22) மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீஎல்ல, ஹக்மண பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்.
ஆபத்தான நிலையில் இச்சிறுவன் கராப்பிட்டி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த வேளையில் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச்சிறுவன் தனது தாய், தந்தை, சகோதரியுடன் உறவினர் வீட்டிற்கு சென்று, நீராடச் சென்றிருந்தபோது இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளான்.
இது தொடர்பில் காலி பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Add new comment