வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டுள்ளது.
கடந்த நான்கு நாட்கள் விடுமுறையின் பின்னர் நேற்று முன்தினம் வங்கி திறக்கப்பட்ட சமயத்தில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திரம் உடைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அறையினுள் காணப்பட்ட இரும்பு குப்பைக் கூடையினால் பணம் வழங்கும் இயந்திரம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருவதுடன் எனினும் இதுவரையில் சந்தேகத்தின் பெயரிலும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியா விசேட நிருபர்
Add new comment