'ஊரடங்கு பாதிப்பில் இருந்து அச்சு ஊடகங்களை மீட்க வேண்டும்' என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எழுதிய கடிதம் பிரதமர் மோடி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து மீள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு அச்சு ஊடகங்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து 'தினமலர்', 'தி ஹிந்து', 'தினகரன்', 'தினத்தந்தி', 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கைகளை முன் வைத்து பிரதமர் மோடிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதினார். அக்கடிதம் இளைஞரணி தலைவர் அன்புமணி ஏற்பாட்டில் பிரதமர் அலுவலக உயர் அதிகாரிகளிடம் நேற்றுமுன்தினம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடமும் கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
Add new comment