Saturday, May 23, 2020 - 9:21am
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல், ரஷ்யாவில் சிக்கியிருந்த 260 பேர் நேற்றிரவு (22) ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
மொஸ்கோவிலிருந்து வந்த இக்குழுவினர், ரஷ்யாவில் கல்வியை தொடர்வதற்காக சென்ற 30 வயதிற்கு குறைந்த மாணவர்களாவர்.
இவ்வாறு வருகை தந்தோர், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு இராணுவத்தினரின் உதவியுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
Add new comment