கொழும்பு புதிய கதிரேசன் ஆலயத்தின் பிரதம அறங்காவலர் காலமானார்

இந்து மா மன்றம் அனுதாபம்

கொழும்பு புதிய கதிரேசன் ஆலயத்தின் பிரதம அறங்காவர் சுப்பிரமணியம் செட்டியாரின் மறைவுக்கு அகில இலங்கை இந்து மாமான்றம் அனுதாபம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுக்கப்பட்ட அறிக்ைகயில் கூறப்பட்டுள்ளதாவது, இறைபதம் எய்திய மதிப்புமிக்க சுப்பிரமணிய செட்டியாரின் இழப்பு அனைவருக்கும் துயரம் தருகிறது. செட்டியார் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனைத்து  பணிகளிலும் இயன்றளவில் பங்களிப்புடன் தனது பூரணமான ஒத்துழைப்பினையும் நல்கியவர். அத்துடன் திருக்கேதீஸ்வர திருப்பணிச்சபையிலும் முக்கிய பங்காற்றி சேவைபுரிந்து வந்தவர். 

சமகாலத்தில் சமயப்பணியுடன் சமூகப்பணியினையும் இணைத்து செயல்படுத்தியவர். அவரது மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும். அமரரது ஆத்ம ஈடேற்றத்திற்கு பிரார்த்தனை செய்வதுடன் அமரரது குடும்பத்தினருக்கும் அகில இலங்கை இந்து மாமன்றம்  ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றது.


Add new comment

Or log in with...