கொட்டகலையில் பார் உடைத்து மது போத்தல்கள் திருட்டு

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா நகர் பகுதி மதுபானசாலை ஒன்று இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு பல இலட்சம் பெறுமதியான உள்நாட்டு, வெளிநாட்டு மதுபான போத்தல்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள-பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர் .

நேற்று அதிகாலை கொட்டகலை ரொசிட்டா நகரில் உள்ள மதுபானசாலையின் முன் கதவு திறக்கப்பட்டிருந்ததை கண்ட அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மதுபானசாலை உரிமையாளருக்கு அறிவித்ததையடுத்து உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

(ஹட்டன் சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...