ஆதாரங்களை சமர்ப்பிக்காமல் ரஞ்சன் ராமநாயக்க ஏமாற்றுகிறார்

இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர

குற்றச்சாட்டுகளுக்கான ஆதரங்களை ரஞ்சன் ராமநாயக்க இதுவரை முன்வைக்காமல் ஏமாற்றி வருவதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.  

ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,  

பாராளுமன்றத்தில் எமது பெயர்களை பயன்படுத்தி ரஞ்சன் ராமநாயக்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.பல்வேறு தரப்பினருக்கும் குற்றச்சாட்டு தெரிவித்த அவர் அது தொடர்பான குரல் பதிவுகளை சபையில் சமர்ப்பிப்பதாக கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து மட்டுமன்றி வெளியில் உள்ளவர்கள் பற்றியும் அவர் கூறியிருந்தார்.சகல எம்.பிகள் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.அவர் கூறிய சாட்சியங்களை சமர்ப்பித்தால் எமக்கும் அவற்றை ஆராய முடியும்.  

திருடர்களை கைது செய்யும் விடயம் தொடர்பில் ஒரு தடவை அவர் என்னுடன் தொலைபேசியில் பேசினார்.அவர் கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலளித்தேன்.ஆனால் எம்மீதும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் மீதும் அவர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.  

கடந்த ஆட்சியில் நாம் அரசின் மேசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது சாட்சியங்களுடனே முன்வைத்தோம்.எனவே சாட்சிகளை முன்வைக்குமாறு ரஞ்சன் ராமநாயக்கவை கோருகிறோம்.  

அவர் இதுவரை குரல் பதிவுகளை சமர்ப்பிக்கவில்லை.  

அவருக்கு விசேட அனுமதியாவது வழங்கி அவற்றை வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் இருந்து எடுத்து வர அனுமதி வழங்க வேண்டும்.அவரின் குரல் பதிவுகளை பொலிஸ் கைப்பற்றியுள்ளது என்றும் கூறினார்.  

லோரன்ஸ் செல்வநாயகம்,ஷம்ஸ் பாஹிம்


Add new comment

Or log in with...