2020 ஆம் ஆண்டின் முதலாம் தவணைக்காக 37 தேசிய பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளும் இன்று 02 ஆம் திகதி ஆரம்பிக்கின்றன.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற்கட்டம் ஏற்கனவே 56 நகரங்களிலுள்ள 84 பாடசாலைகளில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப்பணி ஜனவரி 04 ஆம் திகதியே நிறைவடையவுள்ள நிலையில் அதில் 37 பாடசாலைகள் இன்றும் எஞ்சிய 47 பாடசாலைகள் எதிர்வரும் 06 ஆம் திகதியும் ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு 04 இல் அமைந்துள்ள இந்துக் கல்லூரி, கொழும்பு 07 இல் அமைந்துள்ள தர்ஸ்டன் கல்லூரி, கண்டி சீதாதேவி பெண்கள் கல்லூரி, கண்டி பதியுதீன் மஹமுத் பெண்கள் கல்லூரி,அம்பாறை டி.எஸ் சேனாநாயக்க தேசிய பாடசாலை, கல்முனை வெஸ்லி கல்லூரி, கல்முனை மஹமுத் பெண்கள் வித்தியாலயம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்,மன்னார் சென்.சேவியர் ஆண்கள் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ்ப்பாணம் இந்து பெண்கள் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம் உள்ளிட்ட 37 பாடசாலைகளே முதலாம் தவணைக்காக இன்று ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்மி பரசுராமன்
Add new comment