119
இன ஐக்கியம், ஒழுக்கமான சமுதாயத்தை தோற்றுவிக்கும் நோக்குடன் மூன்று நாள் வதிவிடப்பயிற்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்வை அமான் அக்கரைப்பற்று அமைப்பு இந்தோனேசியாவின் அனுசரணையுடன் ஒழுங்குசெய்தது.
திருக்கோவில் பிரதேச செயலக பிரிவிலுள்ள காஞ்சிரங்குடா கால் நடைவளர்ப்பு பயிற்சி நிலையத்தில், இவ்வதிவிடப் பயிற்சி நடத்தப்பட்டது.
அமைப்பின் தலைவர் யு.எல்.எம்.ஹாஷிம் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சி முகாமில், அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து தமிழ், முஸ்லிம் இளைஞர் மற்றும் யுவதிகள் பங்கேற்றிருந்தனர். போதைவஸ்து ஒழிப்பு மற்றும் சமய, சமூக நல்லிணக்கம், குறித்த கலந்துரையாடல்கள் இங்கு இடம்பெற்றன.
(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)