429
வட கொரியா நேற்று (18) இரண்டாவது நாளாகப் புவியீர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சியுள்ளது.
இது, இந்த ஆண்டு வட கொரியா பாய்ச்சியுள்ள ஐந்தாவது கண்டம்விட்டுக் கண்டம் பாயக்கூடிய புவியீர்ப்பு ஏவுகணையாக உள்ளது. இவ்வாறு பாய்ச்சப்பட்ட ஏவுகணை 15,000 கீலோமீற்றரைத் தாண்டிச் செல்லக்கூடியது என்று ஜப்பான் கூறியது.
அது அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் எட்டக்கூடிய ஆற்றல் கொண்டது.
வட கொரியா நடத்திய புவியீர்ப்பு ஏவுகணைச் சோதனைகளுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்தது. வட கொரியா சினமூட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகத் தென் கொரியா கூறியது.
கடந்த ஞாயிறன்று (17) வட கொரியா குறுந்தொலைவுப் புவியீர்ப்பு ஏவுகணையைப் பாய்ச்சியது.