Friday, April 26, 2024
Home » அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சொந்தமான கட்டடத்தில் தீ

அநுராதபுரம் வைத்தியசாலைக்கு சொந்தமான கட்டடத்தில் தீ

- உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை

by Prashahini
December 11, 2023 3:51 pm 0 comment

அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சொந்தமான மெத்சிறி செவன கட்டட வளாகத்தில் தீ விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தீயை அணைக்க அநுராதபுரம் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் 2 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து கட்டட வளாகத்தில் இருந்த உள்நோயாளிகளை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கட்டடத்தின் மேல் தளத்தின் கூரையில் தொடர்ந்து தீ பரவி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம் பொது வைத்தியசாலையுடன் இணைந்த சிறுநீரக நோயாளர் சேவை, நலன் மற்றும் ஆராய்ச்சி நிலையமான ‘மெத்சிறி செவன’ கட்டிடம், 2019 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், ரூ.437 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT