– 3ஆவது வாசிப்பில் ஆதரவு 100; எதிர்ப்பு 55
பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம் விவாதம் இன்றி 51 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு ஆதரவாக 98 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தது.
ஒதுக்கீடு (2024) சட்டமூலம் மீதான இன்றைய தினத்துக்குரிய குழுநிலை அலுவல்கள் நிறைவுற்றதை உடனடுத்து ஒழுக்குப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீடு நிறைவேற்றப்பட்டது.
இதற்கமைய இன்று பி.ப 4.35 மணிக்கு சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 98 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய இரண்டமாவது மதிப்பீடு 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குழு நிலையில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. பி.ப 4.58 மணியளவில் சட்டமூலத்தின் மூன்றாவது மதிப்பீட்டுக்கான விவாதம் நடத்தப்பட்டது. இதில் ஆதரவாக 100 வாக்குகளும், எதிராக 55 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதற்கு அமைய சேர் பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் 45 மேலதிக வாக்குகளால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அத்துடன், நிதிச் சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீடும் மற்றும் மூன்றாவது மதிப்பீடு என்பன இடம்பெற்று, திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டதுடன், குறைநிரப்புத் தெகை செலவீனத் தலைப்பும் அங்கீகரிக்கப்பட்டது.
இதேவேளை, பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியன தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை இன்று (11) நடத்துவது குறித்து முன்வைக்கப்பட்ட பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம், நிதிச் சட்டமூலம் ஆகியவை தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை இன்றையதினமே (11) நடத்தி அவற்றை நிறைவேற்றுவது தொடர்பில் சபை முதல்வர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை இன்று காலை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒதுக்கீடு (2024) சட்டமூலம் மீதான இன்றைய தினத்துக்குரிய குழுநிலை அலுவல்கள் நிறைவுற்றதை உடனடுத்து ஒழுக்குப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட VAT திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீட்டை விவாதித்து இன்றையதினமே நிறைவேற்றுவதற்கான பிரேரணையை சபை முதல்வர் முன்வைத்தார்.
அத்துடன், குறைநிரப்புத் தெகை செலவீனத் தலைப்பை இன்றைய தினமே அங்கீகரிப்பதற்கும் அவர் முன்மொழிந்தார்.
அதற்கமைய, இந்தப் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்தது.
இதற்கமைய இன்று மு.ப 10.00 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், இதற்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 41 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷனி பெனாண்டோபுள்ளே வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்த நிலையில், ஆளும் கட்சியால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
2ஆவது வாசிப்பில் ஆதரவு 98; எதிர்ப்பு 41
3ஆவது வாசிப்பில் ஆதரவு 100; எதிர்ப்பு 55