Home » 25 ஆண்டுகளின் பின் மேற்கிந்திய அணிக்கு ஒருநாள் தொடர் வெற்றி

25 ஆண்டுகளின் பின் மேற்கிந்திய அணிக்கு ஒருநாள் தொடர் வெற்றி

by Rizwan Segu Mohideen
December 11, 2023 2:47 pm 0 comment

மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஆண்டுகளில் முதல் முறையாக சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் வெற்றியீட்டியுள்ளது.

பிரைட்டனில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியதன் மூலமே மேற்கிந்திய தீவுகள் அணி 2–0 என தொடரை கைப்பற்றியது. இது 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் ஒன்றை வெல்வது முதல் முறையாகவும் இருந்தது.

இதில் மழையால் 40 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இங்கிலாந்து அணி 40 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களையே பெற்றது. மத்திய வரிசையில் பென் டக்கட் 71 ஓட்டங்களை குவித்தார்.

மழை காரணமாக 34 ஓவர்களுக்கு 188 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி 31.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை பெற்று வெற்றியீட்டியது.

அண்மையில் நடந்த உலகக் கிண்ணப் போட்டிக்கு தகுதி பெறாத மேற்கிந்திய தீவுகள் 1998 ஆம் ஆண்டிலேயே சொந்த மண்ணில் இங்கிலாந்தை தொடர் ஒன்றில் வென்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT