பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்மேடு ஒன்று சரிந்துள்ளது.
இதனால் அந்த வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.
நேற்று (07) இரவு பெய்த கடும் மழையுடன் குறித்த பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்தும் மழை பெய்தால் மேலும் பல நிலச்சரிவுகள் இடம்பெற வாய்ப்புக்கள் உண்டு எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இடத்தில் இதற்கு முன்னரும் பலமுறை மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வீதியில் போக்குவரத்தினை சீர் செய்ய பொலிஸார் உரிய தரப்பினருடன் தொடர்பு கொண்டு முயற்சிகளை மேற்கொண்டு வருவதோடு, பயணிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- ஹட்டனிலிருந்து கொழும்பு மற்றும் கண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் தியகல சந்தியிலிருந்து நோட்டன்பிரிஜ் நகரம் ஊடாக கினிகத்தேன, ரஞ்சுராவ சந்தி மற்றும் களுகல சந்தி வரை,
- கொழும்பிலிருந்து செல்லும் வாகனங்கள் களுகல சந்தியிலிருந்து நோர்டன் பிரிட்ஜ் ஊடாக தியகல சந்தி ஹட்டன் வரை,
- கண்டியில் இருந்து செல்லும் வாகனங்கள் கினிகத்ஹேன, ரஞ்சுராவ சந்தியிலிருந்து
தியகல சந்தி நோர்டன்பிரிட்ஜ் ஊடாக ஹட்டன் நோக்கி பயணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி சுழற்சி நிருபர், கினிகத்தேனை தினகரன் நிருபர்
Media-on-2023.12.08-at-1015