செங்கடலின் தெற்குப் பகுதியில் 3 வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் 2 இஸ்ரேலியக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஒப்புக்கொண்டனர். யுனிட்டி எக்ஸ்பிளோரர், நம்பர் 9 ஆகிய இஸ்ரேலியக் கப்பல்களை ஆளில்லா விமானம், ஏவுகணை கொண்டு தாக்கியதாக அவர்கள் கூறினர்.
பிராந்தியத்தில் இருந்த அமெரிக்கப் போர்க் கப்பல் அந்தக் கப்பல்களின் உதவிக்குச் சென்றதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் குறிப்பிட்டது. பலஸ்தீனர்களுக்குத் துணை நிற்க யெமன் மக்கள் விடுத்த கோரிக்கைகள், இஸ்லாமிய நாடுகள் விடுத்த அழைப்புகள் ஆகியவற்றுக்கு இணங்க அந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹூத்தி பேச்சாளர் ஒருவர் கூறினார்.
வணிகக் கப்பல்களுக்கு உதவும் வேளையில் அமெரிக்கப் போர்க் கப்பல் 3 ஆளில்லா விமானங்களை வீழ்த்தியதாக அமெரிக்க இராணுவம் கூறியது.
ஈரானின் ஆதரவுடன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் அந்தத் தாக்குதல்களை நடத்தியதாகத் தாங்கள் நம்புவதாய் அது குறிப்பிட்டது.