235
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று பிற்பகல் 21 கிலோ கடலாமை இறைச்சி மீட்கப்பட்டிருப்பதுடன் சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநகர் பகுதியில் பிடிக்கப்பட்ட கடலாமைகளை தென்மராட்சி- நாவற்குழிப் பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து இறைச்சியாக்கிய போதே சாவகச்சேரிப் பொலிஸார் இச்சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கைதான சந்தேகநபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(சாவகச்சேரி விசேட நிருபர்)