14 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
ஊவா பரணகம, கலஹாகம பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காணப்படுவதால், அப்பிரதேசத்தில் வசிக்கும் 14 குடும்பங்களைச் சேர்ந்த 42 பேர், அவர்களது வசிப்பிடங்களிலிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டதாக, ஊவா பரணகம பிரதேச செயலகம் தெரிவித்தது.
இந்தக் குடும்பங்களின் பாதுகாப்பைக் கவனத்திற்கொண்டு அவர்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் 8 குடும்பங்களில் 27 பேர் அலுவல பள்ளிவாசலிலும், 7 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேர் கலஹாகம விகாரையிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, எல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உடுவார பிரதேசத்திலும் மூன்று குடும்பங்கள் அவர்களது வசிப்பிடங்களிலிருந்து வெளி யேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடும் மழையுடன் மண்சரிவு ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து, இந்தக் குடும்பங்கள் அவர்களது வசிப்பிடங்களிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக, பதுளை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.