Home » ஹட்டன் – டிக்ஓயா ஆற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு

ஹட்டன் – டிக்ஓயா ஆற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு

- மது அருந்திவிட்டு வீடு செல்லும்போது சம்பவம்

by Prashahini
November 13, 2023 11:03 am 0 comment

ஹட்டனில் இருந்து காசல்ரீ நீர்த்தேக்கத்துக்கு நீரேந்திச்செல்லும் டிக்ஓயா ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த ஒருவரின் சடலம் குறித்த ஆற்றிலிருந்து நேற்று (12) மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த 28 வயதுடைய சந்திரசேகரன் சுரேன் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் நகருக்கு நேற்று முன்தினம் (11) வந்துள்ள குறித்த நபர், மது அருந்திவிட்டு, பஸ்ஸில் சென்றுள்ளார். பஸ்ஸில் இருந்து இறங்கி, வீடு நோக்கி நடந்து செல்கையிலேயே ஆற்றில் விழுந்து காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து தோட்ட மக்கள், பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, இவரின் மனைவி தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹட்டன் சுழற்சி நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT